Wednesday, November 29, 2006

<<>>ஈரோடு ஐம்பெரும்விழா-படங்கள்<<>>

நவம்பர் 26ம்தேதியன்று
ஈரோடு மாவட்டம்
திண்டல்
வேளாளர் மகளிர்
கல்லூரியில்
கஸ்தூர்பா கலையரங்கில்
அனைத்திந்திய சீன
வானொலியின் தமிழ்
நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு வெகு
சிறப்பாக நடைபெற்றது.




காலை 10மணிக்கு

அனைத்திந்திய சீன

வானொலியின்

தமிழ் பிரிவு தலைவர்

திருமதி.கலையரசி

அம்மையார் உட்பட

நான்கு பிரதிநிதிகளும்


மேளதாளத்தோடு தமிழகக் கலாச்சாரப்படி விழா மேடைக்குஅழைத்துச் செல்லப்பட்டனர். பரதநாட்டியத்துடன் ஐம்பெரும்விழா துவங்கியது. சக்தி மசால நிறுவன இயக்குனர் திருமதி சாந்தி துரைசாமி குத்து விளக்கேற்றியது நேயர்களுக்கு புத்தொளியூட்ட, விழாவிற்கு வந்திருந்த வர்களை வரவேற்று அகில இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற பொருளாளர் திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அகில இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம் தலைமையுரை நிகழ்த்தினார். வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி சந்திரா தங்கவேலு முன்னிலை வகித்தார்.












தொடர்ந்து சீன வானொலி தலைவர் உரை
வாசித்தளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
சீன வானொலி தமிழ் பிரிவு தலைவர் திருமதி
கலையரசி அவர்கள் உரைநிகழ்த்தினர்கள்.
தொடர்ந்து ஈரோடு மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரி திரு.பி.குப்புசாமி,
முன்னாள் சீன வானொலி நிபுணர்
முனைவர் திரு.ந.கடிகாசலம் உட்படமாவட்ட
செஞ்சிலுவை சங்க கெளரவ செயலாளர் மற்றும்
பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு
கருத்தரங்கை வாழ்த்திப் பேசினர்.

நேயர்களுக்கு நினைவுப்பரிசும் மலரும்
சீன வானொலிப் பிரதிநிதிகள் வழங்கினர்.
பெருந்துறை அபெக்ஸ் பள்ளியின்
மாணவமாணவியரின் கலைநிகழ்ச்சிகள்
நடனம் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக
அமைந்தது.


நாமக்க்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாம்
வகுப்பு மாணவியின் நடனத்தால் ஈர்க்கப்பட்ட
நேபாளப்பிரிவு தலைவர் திருமதி.ஜங் யு
அவர்களும் அந்த மாணவியுடன் சேர்ந்துகொண்டு
நடனமாட நேயர்களின் கரவொலி விண்ணைத்
தொட்டது!
மேலும், சீனத் தேயிலை பற்றிய அழகான சீன
மொழிப் பாடல் ஒன்றையும் அவர் பாடினார்.
நேபாள மொழிப்பிரிவுத் தலைவர்
அவர்கள் சீன வானொலியின் நடனக்குழுவில்
இடம்பெற்றுள்ளவர்
அதனைத் தொடர்ந்துதொடர்ந்து

சீன வானொலி அமெரிக்க நேயர்மன்றத்
தலைவர் சி.எஸ்.ஆல்பர்ட் பெர்னாண்டோவின்
வாழ்த்துரை வாசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நேயர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட நேயர்களில் ஒருபகுதியினருக்கு சீன வானொலி அனுப்பி வைத்த Magic Calculator நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கருத்தரங்கு தொடர்பான சிறப்பு மலரும் நேயர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
மதிய உணவிற்குப்பின்னர் கருத்தரங்கு நிறைவினை எய்தியது.


ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை
உள்ளிட்ட பலமாவட்டங்களில் இருந்து சுமார் 500 நேயர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் விழுப்புரத்தில் நேயர்கள் சீன வானொலிப்பிரதிநிதிகளுக்கு மல்லிகை மாலை சூடி சிறப்பான வரவேற்பை நல்கினர். ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனத்துக்கு சீன வானொலிப் பிரதிநிதிகள் விஜயம் செய்தனர். நிறுவன இயக்குனர் நிறுவனத்தை பிரதிநிதிகளுக்கு சுற்றிக் காண்பித்தார்.


பிரதிநிதிகளுடன் பல்லவி கே.பரமசிவன், வளவனூர் எஸ்.செல்வம் மற்றும் புதுவை நேயர்மன்றத் தலைவர் பாலக்குமார்,
சேந்தமங்கலம் ரவிச்சந்திரன் ஆகியோர் சென்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம் தலைமையில் புதுவை நேயர்மன்றத்தலைவர் திரு.பாலக்குமார், பொருளாளர் திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன், திரு.நாச்சிமுத்து, திரு.ராஜகோபால் உட்பட வரவேற்பளித்தனர்.





ஈரோடு சக்தி மசாலா
நிறுவனத்தில்.

உடன் சக்தி மசாலா

அதிபரின் மகன்....!





கல்லூரி முதல்வர்
அறையில்...!







கொங்கு சமுதாய பண்பலை நிலைய ஒலிப்பதிவுக் கூடத்தில் சீன வானொலிபிரதிநிதிகளுடன்திரு.செல்வம்,
திரு.பல்லவி கே.பரமசிவன் மற்றும்
சேந்தமங்கலம்எஸ்.எம்.ரவிச்சந்திரன்
ஆகியோர்!









சீன வானொலிப் பிரதிநிதிகள்

கல்லூரி வளாகத்தில்.....!




பெருந்துறை வேளாளர் கல்லூரி


வளாகத்தில் மரம் நடும்

நிகழ்ச்சியில்


தமிழ் பிரிவு தலைவர்

திருமதி கலையரசி....!





விழுப்புரத்தில் செய்தியாளர்கள்
சந்திப்பில்
சீன வானொலி தமிழ் பிரிவு தலைவர்
திருமதி கலையரசி




பயணக்குழுவினர்(இடமிருந்து வலமாக.. நேபாள மொழிப்பிரிவுத் தலைவர் திருமதி. ஜங் யூ,
தமிழ்ப்பிரிவுத் தலைவர் திருமதி. க‌லைய‌ர‌சி, ஆசியத்துறை துணைத் தலைவர் சுன் ஜியான் ஹி மற்றும் சிங்கள மொழிப் பிரிவு துணைத் தலைவர் செங் லீ ஆகியோர்.







விழுப்புரத்தில் நேயர்கள்


அளித்த வரவேற்பு








சென்னையில் தங்கியிருந்த
விடுதியில் சீன வானொலி தமிழ் பிரிவு
தலைவர் திருமதி கலையரசி, அகில
இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற
தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம்



ராஜகோபால்,
எஸ்.எம்.இரவிச்சந்திரன்,


நாச்சிமுத்து ஆகியோருடன்
அகில இந்திய சீன வானொலி
நேயர்கள் மன்ற
தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம்

No comments: