Tuesday, October 23, 2007

வாழ்த்துக்கள்!!

<>வாழ்த்துச் செய்தி<>

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்


(சி.பி.சி.) பொதுச்செயலராக
சீன அதிபர் ஹு ஜின்டாவ்(64) மீண்டும்



தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு
என்னினிய வாழ்த்துக்கள்!




இரண்டாவது முறையாக இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள,
இவர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு


அதாவது 2012 ஆம் ஆண்டுவரை
இப்பதவியில் நீடித்திருக்கும் காலகட்டத்தில்


இந்தியா சீனா நட்புறவு
மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன்.



சீனாவின் அதிபராக இருந்துவரும் ஹு ஜின்டாவ்,
அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது
அவரது வலிமையையும் செல்வாக்கையும்
உறுதிப்படுத்தியுள்ளது.

சீன ராணுவ முப்படைகளின் தலைமை கமாண்டராகவும் அவர் நீடிப்பார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அனைத்து முக்கிய முடிவுகளையும்
இறுதிசெய்யும் அதிகாரம் படைத்த தலைமைக் குழுவின் தலைவராக
ஹு ஜின்டாவ் செயல்படுவார். இக்குழுவில் வு பாங்குவோ, வென் ஜியாபாவ், ஜியா ஜிங்லின், லீ சாங்குன், ஜிங்பிங், லீ கெகியாங், ஹி குவோஜியாங், ஜோவ் யாங்காங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்,
இவர்களுக்கும் என்னினிய வாழ்த்துக்கள்!!

சீனா பின்பற்றிவரும் தன்னிச்சையான வெளியுறவுக்
கொள்கைகள் தொடரும். சமூக சமத்துவம்,
அனைவருக்கும் சமநீதி ஆகிய கொள்கைகள்
தொடர்ந்து பின்பற்றப்படும்.

சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்ப சமதர்ம கொள்கைகள்
நடைமுறைப்படுத்தப்படும்.

அனைத்து நாடுகளுடனும் பஞ்சசீல கொள்கைகளின்
அடிப்படையில் நட்புறவும் ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்படும்.
உலகில் அமைதி தவழ்ந்து நிம்மதி நிலவ வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசிய‌ ஹு ஜின்டாவ்
அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள்
அவ‌ர‌து ஆழ‌மான‌ சிந்த‌னையையும் தொலைநோக்குப் பார்வையையும் ந‌ம்மால் உண‌ர‌முடிகிற‌து.

No comments: